வெள்ளி, 14 டிசம்பர், 2012

வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்தால் தொடவேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை


வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அவ்வாறான பொருட்களை யாராவது கண்டெடுத்தால், அதனை கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள மருத்துவ பரிசொதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

இது போதும் எனக்கு - வைரமுத்து

அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுப...